என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 8 ஜூலை, 2011

சேனைக்கு வாழ்த்துக்கள்

வலைத்தளங்களில் முதன்மையிடத்தை எட்டிய சேனைக்கு வாழ்த்துக்கள்

b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]

பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று 

மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு 
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து 
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று 

நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.

அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து 
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே

உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று 
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி 
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்


யாதுமானவள்
புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர்

பதிவுகள்:-329
மதிப்பீடு48
சேர்ந்தது:-14/05/2011
பிறப்பிடம்ஆற்காடு, வேலூர் மாவட்டம்
வசிப்பிடம்:-குவைத்

View user profile Send private message

2 கருத்துகள்: