என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 டிசம்பர், 2016

பேராசிரியர். அன்பழகன் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்


உடன்பிறவா சகோதரியால் உருக்குலைந்து போகும் நாட்டில் உடன்பிறவா சகோதரனுக்கு இலக்கணமாய்த் திகழும் பேராசிரியர் அய்யா அன்பழகன் அவர்கள் கலைஞரையும் கட்சியையும் கண்ணெனக் காத்து வருவதைக் காண்பீர் என் தமிழரே என்று சொல்வதில் தான் எவ்வளவு கர்வம் எங்களுக்கு?

இன்று நேற்றல்ல 1942 ஆம் ஆண்டில் கல்லூரி மாணவராய் இருந்தபோது கலைஞருக்குத் துணையாய் நின்றவர் இதோ 74 வருடங்களாக கட்சியின் உயர்வுக்கும்  கலைஞரின் உயர்வுக்கும் உறுதுணையாக அதே நட்புடனும் அதே சகோதரத்துவத்துடனும் இன்னும் அதிகமான அன்புடனும் கலைஞர் அருகிலே அமர்ந்து அன்பாலே அவரை ஆண்டுகொண்டு இருக்கிறார்.

75 ஆண்டு Platinum Jubilee  நோக்கிப் பயணிக்கும் இந்த நட்பிற்கு என் வாழ்த்துக்களும் பேராசிரியர். அன்பழகன் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவிப்பதில் அளவிலா மகிழ்வும் பெருமையும் அடைகிறேன். அய்யா அவர்கள் சீரான உடல்நலத்துடனும் சீரிய சிந்தனையுடனும் இன்னும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.



மாநில ஒருங்கிணைப்பாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை இலக்கிய அணி.


திங்கள், 25 ஜனவரி, 2016

பழுதில்லாத் தமிழுக்குத் திறம்சேர்க்கும் புலவருக்கு….

புலவர் திரு சூசை மைக்கேல் அவர்களின் பிறந்த நாளுக்கு என்னுடைய சிறிதான வாழ்த்து.

சிங்கத்தின் கர்ஜனையா சிறுபூவின் இதழ்வெடிப்பா
பங்கமின்றிப் பண்ணமைத்துப் பாங்காகப் பாடுகின்ற
புங்கைமர நிழலருமை போற்றுகின்ற மிக்கேலாம்
தங்கசூசை பிறந்தநாளும் இதுவென்றே அறிவீரா?
கன்னலென இனிக்கிறது கருத்தமைந்த தாள்களெல்லாம்
முன்னிதுபோல் உண்டதில்லை முறையற்றுப் புகழவில்லை
பின்னையென்ன சொல்வதுநான்; பொருளுணர்ந்து படித்தபோது
அன்னையவள் ஊட்டிவிட்ட அமிழ்துகூட இனித்ததில்லை.
அமுதூட்டும் அன்னையிடம் அடம்பிடித்து விலகிநின்றேன்
தமிழூட்டும் தங்களிடம் தள்ளாடி வந்து நின்றேன்
காஞ்சிமகன் அண்ணாவின் நாத்தமிழைச் சுவைத்ததுபோல்
நாஞ்சில்மகன்; தமிழ்கேட்க நாளெல்லாம் விழைகின்றேன்
ஆய்ந்தெடுத்த அழகுதமிழ் அளந்துவைத்த ஈரடியை
ஓய்ந்திடாது ஒலிக்குமிந்த நாபடைத்த நாவலரை
வாஞ்சையோடு வாழ்த்திடவே வந்துநின்று குவிந்திருக்கும்
நாஞ்சிற்கரை ஓரமெங்கும் நற்றமிழர் கூட்டமம்மா!
எங்குலத்தார் மீன்பிடிக்கும் கரையெங்கும் தமிழ்தூவி
எங்குமுள தமிழ்ப்புலவோர் இயன்றவரை வாழ்த்துகின்றார்
மங்கையரின் குவிமுல்லைச் சிரிப்பெல்லாம் அதுபோல
பங்கொன்றாய்ப் பழந்தமிழால் ஆசிகளை அவிழ்த்(து)திடுதே!
நெய்தல்நிலப் பூதேடித் தேன்உண்ணும் சிறுவண்டும்
பொய்யில்லாப் புலவனவன் புதல்வனையே வாழ்த்திடத்தான்
ஒய்யாரத் தமிழ்ச்சொல்லால் ஒன்றாகப் பாடிடுதே
பொய்யாமொழி இன்று புகழாலே நனைகிறதே!
சிறுகொம்பில் உலவுகின்ற சிற்றணிலே செல்லாயோ
நறுந்தமிழால் வாழ்த்தொன்றை வைத்துவிட்டு வாராயோ?
பெருமணலின் ஓரத்திலே பாய்ந்தோடும் நண்டினமே
சிறிதான என்வாழ்த்தைச் சேர்த்துவிட்டு வாராயோ?
விழுதாகித் தமிழ்த்தாயின் உருவத்தைத் தாங்குகின்ற
எழுதிவைத்த ஓவியங்காள் ஒன்றாகச் சேர்ந்தின்று
பழுதில்லாத் தமிழுக்குத் திறம்சேர்க்கும் புலவருக்கு
முழுதான மனத்தோடு வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள்!
வாழிய வாழிய வாழிய பல்லாண்டு!
வாழிய வாழிய வாழியவே!
(லதாராணி பூங்காவனம்)

வெள்ளி, 2 மார்ச், 2012

இலங்கையின் வெற்றி... !

இலங்கையின் - ஆஸ்திரேலியா கிரிகெட் போட்டி...

நேற்றிலிருந்தே இன்று நடந்த இலங்கை - ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா எப்படியாவது ஜெயித்துவிட வேண்டுமென்று மனது நினைத்துக்கொண்டே இருந்தது. ஆஸ்திரேலியா வெற்றிபெற்றால் தான் இந்தியா  முத்தரப்பு போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட முடியும் என்ற நிலை இருந்ததால்.... இந்தியர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா அணியைத் தங்கள் அணிபோலவே நினைத்து அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் சந்தோஷப்பட்டும் ஒவ்வொரு விக்கெட்டுக்கு வருத்தப்பட்டும் இருந் தோம். அநேகமாக எல்லோருமே அப்படித்தான்   இருந்திருப்பர். அதே போல இலங்கை அணி ஒவ்வொரு காட்ச் மிஸ் பண்ணும்போதும் ....பீல்டிங் தவறும்போது சந்தோஷப்ப்ட்டும்... ஒரு விக்கட் எடுதால் அவர்கள் மேல் வெறுப்பாகியும் ... இப்படி சென்று கொண்டிருக்க....

கடைசி ஓவர் ஆறு பந்துகள் பத்து ரன்கள் தேவையாயிருக்கும்போது... எப்படியாவது பத்து ரன்னை எடுத்து விடுங்களேன் என்று ஆஸ்திரேலியா அணியினரை அனேகமாக கிரிக்கட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்த  இந்தியர்கள் மனதால் கெஞ்சிக் கொண்டிருந்திருப்பர்....

ஆனால் தில்ஷன் பொவுல் செய்த கடசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த D J ஹஸ்ஸி அடித்த பந்தை குலசேகர  காட்ச் பிடிக்க... பிடித்துவிட்டு அப்படியே தரையில் மல்லாந்து படுத்து ...இலங்கை அணியின் மன இருக்கத்தைத் தளர்த்தியதும்.... சிலநொடிகள் சலனமற்று பின்  நிம்மதிப் பெருமூச்சு  விட்டு தமது வெற்றியை கொண்டாடிய அணித்தலைவர் ஜயவர்தனேவும் .... விக்கெட் விழுந்தவுடன்...வெற்றிபெறவேண்டுமென்று   மனதில் கொண்டிருந்த வெறி தீர்ந்து ஆசுவாசப் பட்ட தில்ஷன்... இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்ட சந்தோஷத்தில்.. மற்றும் .அணியின் ஒவ்வொரு வீரர்களின் மகிழ்ச்சியைப் பார்த்தவுடன்.... நம்மை அறியாமல்.... ஒரு சந்தோஷம் நம் மனதில் ஊடுருவியது...  They deserve to win... என்று மனதாரச் சொல்லுமளவிற்கு இலங்கை அணியினரின் உணர்ச்சி பூத்த அந்த நிமிடம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லையே என நிச்சயமாக நினைக்கவைக்கவும் இல்லை... ஏங்க வைக்கவும் இல்லை...


The best team always wins the game!

இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்... இறுதிப் போட்டியில் எளிதாக வென்று வாகை சூடட்டும்!

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

யுவராஜ் சிங் ...விரைவில் நலமாடைவாராக!

இந்தியாவின் சிறந்த கிரிகெட் வீரர் யுவராஜ் சிங் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 

யுவாவின் இடது நுரையீரலில் வளர்ந்துள்ள மிக ஆபத்தான கட்டியில் புற்று நோய் தாக்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது அறிந்தவுடன் இந்தியாவே தங்கள் உறவினர்களில் யாரோ ஒருவருக்கு நோய் தாக்கப்பட்டுள்ளது போல துடித்துப் போயுள்ளனர். ஆங்காங்கே இவர் விரைவில் குணமடைய சிறப்பு பூஜை நடத்திக்கொண்டும் வாழ்த்துக்களை   அனுப்பிக்கொண்டும் மக்கள் மிகுந்த கவலையோடு உள்ளனர். 

யுவராஜ் பூரண குணமடைந்து ஆரோக்யமாக நாடு திரும்பி நீண்ட ஆயுளோடு மிக்க மகிழ்வான வாழ்க்கை வாழ நாமும் வாழ்த்துவோம்! 


ஞாயிறு, 16 அக்டோபர், 2011

பொற்குழலிக்குப் பிறந்த நாள் வாழ்த்து


 சகோதரர் வித்யாசாகர் அவர்களின் புதல்வி பொற்குழலியின் முதல் பிறந்த நாளுக்கு நானனுப்பிய வாழ்த்து!



பொற்குழலிக்குப் பிறந்த நாள் வாழ்த்து

அமிழ்தினை  விஞ்சிய சுவைதனைக் கொண்ட 
தமிழ்மகள் பெற்ற அருந்தமிழ்க் கவியின்
அருமை மகளென அவனியி லுதித்த
சிறுபொற் குழலிக் கென்றன் வாழ்த்து!

முத்தே மணியே முத்தமிழ் வரவே
தத்தித் தவழும் தமிழ்ப் பூங்கொத்தே
இத்தரை மீதினில் இனிதாய் வாழ
முத்திரை யாக வாழ்த்தினேன் இன்று!

மூத்தோர் ஆசிகள் முறையோ டடைந்து
பூத்த முல்லைப் பூவிவள் தானும்
ஏத்திடும் எல்லா வளம்பெற் றுலகில்
பாத்திர மாக வாழ்த்தினேன் இன்று!

கல்வியில் கலையினில் அன்பினில் பண்பினில்
சொல்லிடு மாறு சிறப்புடன் வாழ்ந்திட
உள்ளவ ரெல்லாம் வாழ்த்திடு மாறே
உள்ளமு வந்து வாழ்த்தினேன் இன்று!

நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும்
ஓங்கிய புகழும் உயர்வான வாழ்வும்
தாங்கிய வாறு தகவுடன் வாழ்ந்திட
தேன்தமி ழாலே வாழ்த்தினேன் இன்று!

வாழிய வாழிய பல்லாண் டென்றும்
வாழிய நலமுடன் வாழ்கவே யென்றும்
ஏழிசை முழங்க எழுதமி ழோடு
வாழ்த்தி வாழ்த்தி மகிழ்ந்தேன் இன்று!

- அன்புடன் லதாராணி

சனி, 16 ஜூலை, 2011

வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....

சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.

22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....

இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன் 
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்!

நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய் 
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய் 
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை 
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார் 

காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன் 
கோலத்தை இங்கே கூட்டினாய் 
உயர்த்தி!  

தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக 
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட 
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!

வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட 
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால் 
விஞ்சிதான் நிற்கிறது உன்வியத்தகு சாதனை!

இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட 
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் 
வென்றிட 
இன்றுபோ லென்றுமே எழுச்சியோ டியங்கிட 
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !

அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி

செவ்வாய், 12 ஜூலை, 2011

வாழ்த்துக்கள் சாதிக்...

நல்லதொரு கவியாக நீ தமிழுலகில் அறியப்படவேண்டுமென்ற அக்கறை கொண்ட அன்புநிறை சகோதரியின் வாழ்த்துக்கள் உமக்கு எப்போதும் உரித்து ! 

18000 பதிவுகள் சேனைத் தமிழுலாவில் பதித்து சிறப்பான முன்னோடியாகத் திகழும் உனக்கு எனது பாராட்டுக்கள்!

பாராட்டும் அதனோடு சிறு பரிசுமாக இந்தக் கவிதையும் உமக்கே! 

பாதித்த பக்கங்கள் அத்தனையும் பிய்த்துதறி 
சாதிக்க வேண்டுமென்று எண்ணமொன்றே கொண்டு 
சாதிக்காய் மாறிபுது வேடமது பூண்டு - அவர்க்கு 
போதிக்கும் முறைகண்டு வியக்கின்றேன் யான்! 

முத்துப்போல் பதிவுகளை முனைப்பாக இட்டுதினம்
எத்திவிட்ட ஆயிரங்கள் பதினெட்டான இந்நந்நாளில்
நா"திக்கா"மல் அனைவரையும் வாழ்த்திடும் உனையென் 
நா"தித்திக்க" தித்திக்க வாழ்த்துகிறேன் மகிழ்ந்து!

உறங்காத சிந்தனைகள் ஒருகோடி சேர்த்து
சிறந்திடுவாய் சிறப்பான கோடிகவி யாத்து
உயர்வான இன்னும்பல உயரங்கள் தொடவே 
பிறர்போல வாழ்த்திடுவேன் அன்புடனே தினமே!

சேனைக்கு நீசெய்யும் சேவையினைக் கண்டுநான் 
வாயடைத்துப் போகின்றேன் வார்த்தையிலை சொல்ல 
வானைப்போல் சேனையது உயர்ந்துபுகழ் கொள்ள 
வாய்திறந்து வாழ்த்துகிறேன் வாடிடாது வளர்க்க! 


அன்புடன்,
யாதுமானவள் 

வெள்ளி, 8 ஜூலை, 2011

சேனைக்கு வாழ்த்துக்கள்

வலைத்தளங்களில் முதன்மையிடத்தை எட்டிய சேனைக்கு வாழ்த்துக்கள்

b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]

பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று 

மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு 
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து 
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று 

நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.

அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து 
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே

உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று 
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி 
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்


யாதுமானவள்
புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர்

பதிவுகள்:-329
மதிப்பீடு48
சேர்ந்தது:-14/05/2011
பிறப்பிடம்ஆற்காடு, வேலூர் மாவட்டம்
வசிப்பிடம்:-குவைத்

View user profile Send private message

ஞாயிறு, 26 ஜூன், 2011

எனக்கு வந்த வாழ்த்து கவிதை

திமிரி பள்ளியின் தமிழாசிரியை என்னுடைய கவிதைகளைப் படித்துவிட்டு எனக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை இது...

.......
G+q;fhtdj;jpy; G+j;j yjhuhzpg; nghd;kyNu jq;fs;
    nghUkiyj; jhq;fpa efyjidg;
ghq;fha;g; gbj;Njd; gbj;Jr; Ritj;Njd;-igq;fpspNa
    ghujpg; ngz;iz ehd; ghu;j;Njd;.
jkpo; jkpowpQu; jkpopdk; eypTfz;L
    ,uj;jk; #NlWk; jq;fs; tpopePu;r; rpjwy;
nrtpg;giwia #Nlw;wpr; nrf;Fkhlha;j; jhf;fptplj;
    njwpj;jd nrhw;fs; Ntjidia tupj;jd tupfs;
<oj;jkpou;f;F vg;NghJ tpbay; vd
    Vq;fpj; jtpf;Fk; jq;fspd; ,jaf; fjwy;
Coy; vq;Fk; cytf; fz;;L fz;L
    cwq;f kwe;j  Cik tpopfs;
NguoF kapYf;Fg; Nghu;it <e;j Ngfdtd;
    Ngjikiaj; njsptha;g; NgRk; nghd;kapNy
Mz;ikia Mz;ik mupaiz Vw;wpg; ghu;f;Fk;
    Mz; Mjpf;f fhyk; mwpe;jJ jhNd?
FLk;g murpay; gLFopapy; #upaidf;
    nfhd;W Gijj;j nfhLikjid neQ;rk;
ntJk;g Ntbf;if ghu;f;f Ntz;Lk;- ,Jjhd;
    tpjpapd; tpisahl;L fz;Nz Ntnwd;d nrhy;y?
fd;Wfs; fhisia mbkhlha; tpw;Wf;
    fspahl;lk; Nghl;l jdhy;
te;j tpisT ,J tz;z epyNt ehk;
        tUe;jp Mfg;NghtJ VJ?
jkpNohL jq;fspd; cwT mwpe;Njd; -jq;fepyhNt
    jq;fSf;Fg; nghd;itf;Fk; ,lj;jpy; G+itf;fpNwd;.
G+tha; vd; tzf;fj;ij cq;fs; Kd;itf;fpNwd;.

,ytrq;fs; Ntz;LtJ ,y;iy vd;W
          ,iytrk; te;j ,d;iwa jkpofk;
eyKld; tho ehk; Ntz;b epw;Nghk;- eLf;fk; Ntz;lhk;
    kPz;Lk; Xu; ghlk; ehk; fw;Nghk;
jfty; njhopw;El;gk; tsu;e;jJ> tsu;fpd;wJ
    cwTfs; mUfpUe;Jk; cs;sj;jhy; jPTfsha;
jd;de; jdpad; Mdhd; kdpjd; - toptop te;j
    kuGfs; kupahijfs; kwe;Nj Nghdhd;
Ntfk; $lf;$l tpNtfk; jsu;fpwJ nts;sk;
    fiu jhz;lj; jhz;l kdk; Ntbf;if ghu;f;fpwJ.

mr;Rf;ffiy MAjk; jq;fs; ifapy; -MuKNj
    MfhjJk; cz;Nlh Ngdh Kidahy;
kpr;rk; Xuhapuk; kPz;Lk; NgRNthk;
    kPz;Lk; ehk; re;jpg;Nghk; jfty; tiyapy;
md;ghNy jk;gjpfs; Nru;e;J tho;e;J
    mfd;wpyha; Mapuk; gy;yhapuk; Mz;L
kz;NkNy tho;e;jpl tho;f vd;W
    kdjhu tho;j;JfpNwd; tho;f gy;yhz;L.