என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
சித்தர் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்தர் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஜூலை, 2016

சிவவாக்கியர் பாடல்கள் - மூடப்பழக்கங்களைச் சாடுதல்



சமுதாயத்தில்  புரையோடி விட்டிருக்கும்  மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான   சித்தராக   சிவவாக்கியர்  காட்சி   தருகின்றார்.   ஆசார,
அனுஷ்டானங்களைக்  கடைபிடிக்கிறேன்  பேர்வழி என்று தேவையற்ற மூடப்
பழக்கங்களில்  மூழ்கித்  தவிக்கும்   மூடர்களைக்   கரையேறி   உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.


     “பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
     பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
     ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
     ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)


என்று உண்மை பூசை பற்றியும்,
     
   “வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
     வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
     வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
     வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”


என்று  எச்சில்  படாமல்  பூசை  செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப்
பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.

வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள  மந்திரங்களும் எச்சில், பசு
மடியில் கன்று குடித்த  பால் எச்சில்,  மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி
லொளியுமெச்சில்  மோதகங்களான  தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில்
எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.

     
     புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
     புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
     புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
     புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)



என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும்,

     “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
     மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)


   ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் 
   ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே 
   மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் 
   மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

என்ற  பாடலில்  மாட்டிறைச்சி   தின்பது  பாவம்   என்று  அருவறுக்கும்
வேதியர்களே  மாட்டிறைச்சிதான்  உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா? 


ஆட்டிறைச்சி  தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி
செய்யப் படுவதும், நெய்யாய்  இடுவதும் எது  என்பதை யோசிப் பீர்களாக
என்கிறார்.


சித்தர் பாடல்கள் - அகப்பேய்ச் சித்தர் பாடல்


இறையச்சம் - எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. ஆதலால்.... கருத்தில் முரண் பட்டிருந்தாலும் கவிதைகளைப் படித்தின்புறுவது என்பது வேறு.


     மனமாகிய பேயை  வென்ற சித்தர் ஆதலின்  இவர் அகப்பேய் சித்தர்
என்றழைக்கப்படுகின்றார்.  அகம் + பேய் + சித்தர்.  இந்த அகப்பேய் சித்தர்
பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு.


     நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து
வாழ்க்கை      நடத்தினார்.      வணிகத்தின்     பொருட்டுத்     தாம்
செல்லுமிடங்களிலெல்லாம்   பலதரப்பட்ட   மனிதர்களைச்  சந்திக்கின்றார்.
மேலுக்கு  மகிழ்ச்சியான  வாழ்க்கையை  வாழ்வதாகச்  சொல்லிக்கொள்ளும்
அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.


     அவர்களின்   துன்பத்திற்குக்   காரணம்   என்ன  என்று  யோசிக்க
ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த
நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது.
ஆசையே  துன்பத்திற்குக்  காரணம்.  ஆசையை  வென்றால் இன்பமயமான
நித்திய  வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். 


இவர் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள். பாடல்களையெல்லாம்
படிக்குந்தோறும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனது அடக்கம் காணுகிறது.


நஞ்சுண்ண வேண்டாவே                      அகப்பேய்
     நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே                          அகப்பேய்
     நீயொன்றும் சொல்லாதே.
1
பராபர மானதடி                             அகப்பேய்
     பரவையாய் வந்ததடி
தராதல மேழ்புவியும்                         அகப்பேய்
     தானே படைத்ததடி.
2
நாத வேதமடி                               அகப்பேய்
     நன்னடங் கண்டாயோ
பாதஞ் சத்தியடி                             அகப்பேய்
     பரவிந்து நாதமடி
3
விந்து நாதமடி                               அகப்பேய்
     மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம்                            அகப்பேய்
     அதனிட மானதடி
4
நாலு பாதமடி                                அகப்பேய்
     நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால்                            அகப்பேய்
     முத்தி யல்லவடி.
5
வாக்காதி யைந்தடியோ                        அகப்பேய்
     வந்த வகைகேளாய்
ஒக்கம தானதடி                             அகப்பேய்
     உண்மைய தல்லவடி.
6
சத்தாதி யைந்தடியோ                        அகப்பேய்
     சாத்திர மானதடி
மித்தையு மாகுமிடி                           அகப்பேய்
     மெய்யது சொன்னேனே.
7
வசனாதி யைந்தடியோ                        அகப்பேய்
     வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி                            அகப்பேய்
     திடனிது கண்டாயே.
8
காரண மானதெல்லாம்                        அகப்பேய்
     கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே                          அகப்பேய்
     வந்தவி தங்களெல்லாம்
9
ஆறு தத்துவமும்                             அகப்பேய்
     ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும்                           அகப்பேய்
     வந்தது மூன்றடியே.
10
பிருதிவி பொன்னிறமே                        அகப்பேய்
     பேதைமை யல்லவடி
உருவது நீரடியோ                            அகப்பேய்
     உள்ளது வெள்ளையடி.
11
தேயு செம்மையடி                            அகப்பேய்
     திடனது கண்டாயே
வாயு நீலமடி                                அகப்பேய்
     வான்பொருள் சொல்வேனே.
12
வான மஞ்சடியோ                            அகப்பேய்
     வந்தது நீகேளாய்
ஊனம தாகாதே                             அகப்பேய்
     உள்ளது சொன்னேனே.
13
அகார மித்தனையும்                          அகப்பேய்
     அங்கென் றெழுந்ததடி
உகாரங் கூடியடி                             அகப்பேய்
     உருவாகி வந்ததடி.
14
மாகார மாயையடி                            அகப்பேய்
     மலமது சொன்னேனே
சிகார மூலமடி                               அகப்பேய்
     சிந்தித்துக் கொள்வாயே.
15
வன்னம் புவனமடி                            அகப்பேய்
     மந்திர தந்திரமும்
இன்னமுஞ் சொல்வேனே                       அகப்பேய்
     இம்மென்று கேட்பாயே.
16
அத்தி வரைவாடி                             அகப்பேய்
     ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே                        அகப்பேய்
     மெய்யென்று நம்பாதே.
17
தத்துவ மானதடி                              அகப்பேய்
     சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே                        அகப்பேய்
     பூத வடிவலவோ.
18
இந்த விதங்களெல்லாம்                        அகப்பேய்
     எம்மிறை யல்லவடி
அந்த விதம்வேறே                            அகப்பேய்
     ஆராய்ந்து காணாயோ.
19
பாவந் தீரவென்றால்                          அகப்பேய்
     பாவிக்க லாகாதே
சாவது மில்லையடி                            அகப்பேய்
     சற்குரு பாதமடி.
20
எத்தனை சொன்னாலும்                        அகப்பேய்
     என்மனந் தேறாதே
சித்து மசித்தும்விட்டே                      அகப்பேய்
     சேர்த்துநீ காண்பாயே.
21
சமய மாறுபடி                               அகப்பேய்
     தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம்                          அகப்பேய்
     ஆராய்ந்து சொல்வாயே.
22
ஆறாறு மாகுமடி                             அகப்பேய்
     ஆகாது சொன்னேனே
வேறே யுண்டானால்                          அகப்பேய்
     மெய்யது சொல்வாயே.
23
உன்னை யறிந்தக்கால்                         அகப்பேய்
     ஒன்றையுங் சேராயே
உன்னை யறியும்வகை                         அகப்பேய்
     உள்ளது சொல்வேனே.
24
சரியை யாகாதே                             அகப்பேய்
     சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும்                          அகப்பேய்
     கிட்டுவ தொன்றுமில்லை.
25
யோக மாகாதே                             அகப்பேய்
     உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி                              அகப்பேய்
     தேடாது சொன்னேனே.
26
( சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான
உடற்பயிற்சி  வழிபாட்டினாலும்  போகமாகிய தியான மன வழிபாட்டினாலும்
கூட இறையை இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக்
காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண
முடியும் போலும்.)
ஐந்துதலை நாகமடி                          அகப்பேய்
     ஆதாயங் கொஞ்சமடி
இந்தவிஷந் தீர்க்கும்                         அகப்பேய்
     எம்மிறை கண்டாயே.
27
இறைவ னென்றதெல்லாம்                     அகப்பேய்
     எந்த விதமாகும்
அறை நீகேளாய்                            அகப்பேய்
     ஆனந்த மானதடி.
28
கண்டு கொண்டேனே                         அகப்பேய்
     காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே                         அகப்பேய்
     உள்ளது சொன்னாயே.
29
உள்ளது சொன்னாலும்                        அகப்பேய்
     உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே                            அகப்பேய்
     கண்டாக்குக் காமமடி.
30
அறிந்து நின்றாலும்                           அகப்பேய்
     அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும்                          அகப்பேய்
     போகாதே யுன்னைவிட்டு.
31
ஈசன் பாசமடி                                அகப்பேய்
     இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி                             அகப்பேய்
     பாரமது கண்டாயே.
32
சாத்திர சூத்திரமும்                           அகப்பேய்
     சங்கற்ப மானதெல்லாம்
பார்த்திட லாகாதே                           அகப்பேய்
     பாழ்பலங் கண்டாயே.
33
ஆறு கண்டாயோ                            அகப்பேய்
     அந்த வினைதீர
தேறித் தெளிவதற்கே                         அகப்பேய்
     தீர்த்தமு மாடாயே.
34
எத்தனை காலமுந்தான்                        அகப்பேய்
     யோக மிருந்தாலென்
மூத்தனு மாவாயோ                           அகப்பேய்
     மோட்சமு முண்டாமோ.
35
நாச மாவதற்கே                              அகப்பேய்
     நாடாதே சொன்னேனே

பாசம் போனாலும்                           அகப்பேய்
     பசுக்களும் போகாவே.
36
நாண மேதுக்கடி                             அகப்பேய்
     நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால்                        அகப்பேய்
     காணக் கிடையாதே.
37
சும்மா இருந்துவிடாய்                        அகப்பேய்
     சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம்                          அகப்பேய்
     சுட்டது கண்டாயே.
38
உன்றனைக் காணாதே                         அகப்பேய்
     ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே                         அகப்பேய்
     இடத்தில் வந்தாயே.
39
வான மோடிவரில்                            அகப்பேய்
     வந்தும் பிறப்பாயே
தேனை யுண்ணாமல்                          அகப்பேய்
     தெருவோ டலைந்தாயே.
40
சைவ மானதடி                              அகப்பேய்
     தானாய் நின்றதடி
சைவ மில்லையாகில்                         அகப்பேய்
     சலம்வருங் கண்டாயே.
41
ஆசை யற்றவிடம்                           அகப்பேய்
     அசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி                               அகப்பேய்
     எங்ஙனஞ் சென்றாலும்.
42
ஆணவ மூலமடி                             அகப்பேய்
     அகாரமாய் வந்ததடி
கோணு முகாரமடி                            அகப்பேய்
     கூடப் பிறந்ததுவே.
43
ஒன்று மில்லையடி                           அகப்பேய்
     உள்ள படியாச்சே
நன்றில்லை தீதிலையே                       அகப்பேய்
     நாணமு மில்லையடி.
44
சும்மா இருந்தவிடம்                          அகப்பேய்
     சுட்டது சொன்னேனே
எம்மாய மீதறியேன்                          அகப்பேய்
     என்னையுங் காணேனே.
45
கலைக ளேதுக்கடி                           அகப்பேய்
     கண்டார் நகையாரோ
நிலைக ளேதுக்கடி                            அகப்பேய்
     நீயார் சொல்வாயே.
46
இந்த அமிர்தமடி                            அகப்பேய்
     இரவி விஷமோடி
இந்து வெள்ளையடி                           அகப்பேய்
     இரவி சிவப்பாமே.
47
ஆணல பெண்ணலவே                       அகப்பேய்
     அக்கினி கண்டாயே
தாணுவு மிப்படியே                          அகப்பேய்
     சற்குரு கண்டாயே.
48
என்ன படித்தாலும்                          அகப்பேய்
     எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே                       அகப்பேய்
     சும்மா இருந்துவிடு.
49
காடு மலையுமடி                              அகப்பேய்
     கடுந்தவ மானாலென்
வீடும் வெளியாமோ                           அகப்பேய்
     மெய்யாக வேண்டாமோ.
50
பரத்தில் சென்றாலும்                          அகப்பேய்
     பாரிலே மீளுமடி
பரத்துக் கடுத்தவிடம்                         அகப்பேய்
     பாழது கண்டாயே.
51
பஞ்ச முகமேது                              அகப்பேய்
     பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி                             அகப்பேய்
     குருபாதங் கண்டாயே.
52
பங்க மில்லையடி                           அகப்பேய்
     பாத மிருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம்                    அகப்பேய்
     கண்டு தெளிவாயே.
53
தானது நின்றவிடம்                           அகப்பேய்
     சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே                          அகப்பேய்
     ஊனமொன் றில்லையடி.
54
சைவம் ஆருக்கடி                           அகப்பேய்
     தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம்                            அகப்பேய்
     சற்குரு பாதமடி.
55
பிறவி தீரவென்றால்                          அகப்பேய்
     பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள்                           அகப்பேய்
     சும்மா இருப்பார்கள்.
56
ஆர லைந்தாலும்                            அகப்பேய்
     நீயலை யாதேயடி
ஊர லைந்தாலும்                             அகப்பேய்
     ஒன்றையும் நாடாதே.
57
தேனாறு பாயுமடி                             அகப்பேய்
     திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி                           அகப்பேய்
     ஒன்றையும் நாடாதே.
58
வெள்ளை கறுப்பாமோ                       அகப்பேய்
     வெள்ளியும் செம்பாமோ
உள்ள துண்டோடி                            அகப்பேய்
     உன்னாணை கண்டாயே.
59
அறிவுள் மன்னுமடி                           அகப்பேய்
     ஆதார மில்லையடி
அறிவு பாசமடி                               அகப்பேய்
     அருளது கண்டாயே.
60
வாசியி லேறியபடி                           அகப்பேய்
     வான்பொருள் தேடாயோ
வாசியி லேறினாலும்                          அகப்பேய்
     வாராது சொன்னேனே.
61
தூராதி தூரமடி                              அகப்பேய்
     தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ                           அகப்பேய்
     பாழ்வினை தீரவென்றால்.
62
உண்டாக்கிக் கொண்டதல்ல                   அகப்பேய்
     உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ                    அகப்பேய்
     கற்பனை யற்றதடி.
63
நாலு மறைகாணா                           அகப்பேய்
     நாதனை யார்காண்பார்
நாலு மறைமுடிவில்                           அகப்பேய்
     நற்குரு பாதமடி.
64
மூல மில்லையடி                            அகப்பேய்
     முப்பொரு ளில்லையடி
மூல முண்டானால்                          அகப்பேய்
     முத்தியு முண்டாமே.
65
இந்திர சாலமடி                             அகப்பேய்
     எண்பத் தொருபதமும்
மந்திர மப்படியே                           அகப்பேய்
     வாயைத் திறவாதே.
66
பாழாக வேணுமென்றால்                       அகப்பேய்
     பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே                       அகப்பேய்
     கேள்வியு மில்லையடி
67
சாதி பேதமில்லை                            அகப்பேய்
     தானாகி நின்றவர்க்கே
ஓதி யுணர்ந்தாலும்                          அகப்பேய்
     ஒன்றுந்தா னில்லையடி.
68
சூழ வானமடி                               அகப்பேய்
     சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி                            அகப்பேய்
     மெய்யது கண்டாயே.
69
நானு மில்லையடி                             அகப்பேய்
     நாதனு மில்லையடி
தானு மில்லையடி                             அகப்பேய்
     சற்குரு வில்லையடி.
70
மந்திர மில்லையடி                           அகப்பேய்
     வாதனை யில்லையடி
தந்திர மில்லையடி                           அகப்பேய்
     சமய மழிந்ததடி.
71
பூசை பாசமடி                               அகப்பேய்
     போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி                              அகப்பேய்
     எல்லாமு மிப்படியே.
72
சொல்ல லாகாதோ                           அகப்பேய்
     சொன்னாலும் தோஷமடி
இல்லை இல்லையடி                           அகப்பேய்
     ஏகாந்தங் கண்டாயே.
73
தத்துவத் தெய்வமடி                          அகப்பேய்
     சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம்                    அகப்பேய்
     மாயை வடிவாமே.
74
வார்தை யல்லவடி                           அகப்பேய்
     வாச மகோசரத்தே
ஏற்ற தல்லவடி                               அகப்பேய்
     என்னுடன் வந்ததல்ல.
75
சாத்திர மில்லையடி                           அகப்பேய்
     சலனங் கடந்ததடி
பார்த்திட லாகாதே                          அகப்பேய்
     பாவனைக் கெட்டாதே.
76
என்ன படித்தாலென்                          அகப்பேய்
     ஏதுதான் செய்தாலென்
சொன்ன விதங்களெல்லாம்                    அகப்பேய்
     சுட்டது கண்டாயே.
77
தன்னை யறியவேணும்                        அகப்பேய்
     சாராமற் சாரவேணும்
பின்னை யறிவதெல்லாம்                       அகப்பேய்
     பேயறி வாகுமடி
78
பிச்சை யெடுத்தாலும்                          அகப்பேய்
     பிறவி தொலையாதே
இச்சை யற்றவிடம்                            அகப்பேய்
     எம்மிறை கண்டாயே.
79
கோல மாகாதே                              அகப்பேய்
     குதர்க்கம் ஆகாதே
சால மாகாதே                              அகப்பேய்
     சஞ்சல மாகாதே.
80
ஒப்பனை யல்லவடி                           அகப்பேய்
     உன்னாணை சொன்னேனே
அப்புட னுப்பெனவே                         அகப்பேய்
     ஆராய்ந் திருப்பாயே.
81
மோட்சம் வேண்டார்கள்                      அகப்பேய்
     முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள்                        அகப்பேய்
     சின்மய மானவர்கள்.
82
பாலன் பிசாசமடி                            அகப்பேய்
     பார்த்தால் பித்தனடி
கால மூன்றுமல்ல                            அகப்பேய்
     காரிய மல்லவடி.
83
கண்டது மில்லையடி                          அகப்பேய்
     கண்டவ ருண்டானால்
உண்டது வேண்டடியோ                       அகப்பேய்
     உன்னாணை சொன்னேனே.
84
அஞ்சையு முண்ணாதே                        அகப்பேய்
     ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு                        அகப்பேய்
     நிஷ்டையிற் சாராதே.
85
நாதாந்த வுண்மையிலே                       அகப்பேய்
     நாடாதே சொன்னேனே
மீதான சூதானம்                             அகப்பேய்
     மெய்யென்று நம்பாதே.
86
ஒன்றோ டொன்றுகூடில்                       அகப்பேய்
     ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும்                             அகப்பேய்
     நில்லாது கண்டாயே.
87
தோன்றும் வினைகளெல்லாம்                  அகப்பேய்
     சூனியங் கண்டாயே
தோன்றாமற் றோன்றிடும்                     அகப்பேய்
     சுத்த வெளிதனிலே.
88
பொய்யென்று சொல்லாதே                    அகப்பேய்
     போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னவர்கள்                  அகப்பேய்
     வீடு பெறலாமே.
89
வேத மோதாதே                            அகப்பேய்
     மெய்கண்டோ மென்னாதே
பாதம் நம்பாதே                            அகப்பேய்
     பாவித்துப் பாராதே.
90



  
“ஒப்பனை அல்லவடி - அகப்பேய்
    உன் ஆணை சொன்னேனே
அப்புடனுப் பெனவே - அகப்பேய்
    ஆராய்ந் திருப்பாயே

     மனப்பேயை  அடக்கி  வென்ற  அகப்பேய்  சித்தர் திருவையாற்றில்
சித்தியடைந்தார் என்று போகர் குறிப்பிடுகின்றார்.

சிவவாக்கியர் பாடல்கள் -சாதி வேற்றுமைகளைக் கடிதல்


     சிவவாக்கியர்   தம்   பாடல்களில்   சாதி  வேற்றுமைகளை  மிகவும்
ஆணித்தரமாகக் கண்டிக்கிறார்.

    “சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
     பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ


   சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
     உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
     கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
     உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே

என்றும்,
     அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
     நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
     அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
     அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே

என்று  ஐந்து  கோடி  மந்திரங்களும்  ‘சிவாய நம’  எனும் ஐந்து எழுத்தில்
அடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார்.

     திருமூலரின்  சில  கருத்துக்களையும்   சிவவாக்கியர்  தம்  பாடலில்
எடுத்துரைக்கின்றார்.

     ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’
என்ற திருமூலர் கருத்தினை,
     ‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
     வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
     ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
     காயமான பள்ளியில் காணலாம் இறையையே”

என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.
     இறைவனை  கோயில்,  பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டிய
தில்லை. நமது  உள்ளமே  இறைவன்  உறையும்  கோயில்  இந்த  உடம்பே
அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.

     மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
என்ற திருவள்ளுவரின் கருத்தையும்
 “மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”
என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.
     ஒருவர் பலரிடத்தும்  பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும்   இருக்கலாம்,   யோகம்  செய்து  கொண்டும்   இருக்கலாம்,
நாட்டைத்  துறந்து  காட்டிலே போய்க்கூட வாழலாம்.  ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன
விரதங்கள்  யாவும்  பாழாய்  முடியும்.  உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்
கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.

     அப்படியானால்  உண்மையான  கடவுள்தான்  யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான்  இறைவன்  என்று  விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான்  இறைவன் என்றால்  அறிவாளிகள் மட்டும்தான்  இறைவனைத் தொழ
இயலுமோ?  என்ற  வினாவும்  எழுகிறது.  இல்லை  பாமர  மக்களும்  தம்
அன்பினால்  இறைவனைத்  தரிசிக்கலாம்   என்றும்   இறைவன்   எங்கும்
நிறைந்திருக்கிறான்  என்ற  கருத்தையும்   சிவவாக்கியர்  தம்  பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.


சிவவாக்கியர் பாடல்கள் - காப்பு

     அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
     கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
     தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     1

     
  கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
  கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே

பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
2
               அக்ஷர நிலை

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
3
               சரியை விலக்கல்

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
4
               யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
5
              தேக நிலை

வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக் கொடுப்பரே.
6
               ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.
7

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள் நான் இருக்குமாற தெங்ஙனே.
8
மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்
9
அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில்அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
10
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே.
11
கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம்இதாம் இதல்லவென்று வைத்துழலும் ஏழைகளாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே.
12
நானதேது நீயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராமஎன்ற நாமமே.
13
              யோக நிலை
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.
14
    ஞான நிலை

தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஇப் பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துஉணர்ந்து கொள்ளுமே.
15
                 யோக நிலை

நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்
பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.
16
வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே?
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.
17
அஞ்சுமூணு மெட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யுனும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.
18
அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி ஆனவாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானவாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?
19
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே.
20
சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
21
     ஞான நிலை

தங்கம்ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண் மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே.
22
              யோக நிலை

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்த கூறவல்லிரேல்
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.
23
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில்அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியானது ஒன்றுமே.
24
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
25
              கிரியை நிலை

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யு மாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே.
26
              யோக நிலை

ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம்
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே.
27
   உற்பத்தி நிலை

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே.
28
             ஞான நிலை

பண்டுநான் பறித்துஎறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை.
29
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்தஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரே
விண்டவேத பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே.
30
             யோக நிலை

நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்
நெருப்பும்நீரும் உம்முளே நினைத்துகூற வல்லிரேல்
கருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.
31
பாட்டிலாத பரமனைப் பரலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டி மெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே.
32
             தரிசனம்

செய்யதெங்கி இளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
33
   சரியை நிலை

மாறுபட்ட மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டு போய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.
34
                யோக நிலை

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
35
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே.
36
                கிரியை நிலை

பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே.
37
                ஞான நிலை

இருக்கநாலு வேதமும் எழுத்தைஅற வோதிலும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்து உண்மைகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.
38
                யோக நிலை

கலத்தில்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே.
39
               சரியை நிலை

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே.
40
வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில்எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.
41
ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந் திரங்கள்எச்சில்
மோதகங்க ளானதுஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்
மாதிருந்த விந்தும்எச்சில் மதியும்எச்சில் ஒளியும்எச்சில்
ஏதில்எச்சில் இல்லதில்லை யில்லையில்லை யில்லையே.
42
               உற்பத்தி

பிறப்பதற்கு முன்னெலாம் இருக்குமாற தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாற தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
43
               ஞானம்

அம்பலத்தை அம்புகொண்டுஅசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ
செம்பொன்அம்ப லத்துளே தெளிந்ததே சிவாயமே.
44
                கடவுள் நிலை

சித்தமேது சிந்தையேது சிவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேதம் அற்றது

முத்தியேது மூலமேது மூலமந் திரங்கள்ஏது
வித்திலாத வித்திலே இன்னதென்று இயம்புமே.
45
            ஒடுக்க நிலை

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே.
46
            கிரியை

சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.
47
கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே.
48
தறையினில் கிடந்தபோ தன்றுதூமை என்றிலீர்
துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை என்றிலீர்
பறையறைந்து நீர்பிறந்த தன்று தூமை என்றிலீர்
புரையிலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.
49
தூமைதூமை என்றுளே துவண்டலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந் தனேகவேதம் ஓதுறீர்
தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
50
சொற்குருக்க ளானதும் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
சத்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்க ளானுதும் திரண்டுருண்ட தூமையே.
51
கைவ்வடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடந்த தும்முளே விரைந்து கூடலாகுமே.
52
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
53
இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ.
54
நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்துவாழ்ந் திருந்திடும்
ஏறில்ஏறும் ஈசனும் இயங்குசக்ர தரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.
55
தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.
56
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன்என்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே.
57
உற்றநூல்க ளும்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்
செற்றமாவை உள்ளரைச் செறுக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதியென்றும் வாழுமே.
58
போதடா வெழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே.
59
அகாரமென்ற வக்கரத்துள் அவ்வுவந்து தித்ததோ
உகாரமென்ற வக்கரத்தில் உவ்வுவந்து தித்ததோ
அகாரமும் உகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.
60
அறத்திறங்க ளுக்கும்நீ அகண்ட ம்எண் திசைக்கும்நீ
திறத்திறங்க ளுக்கும்நீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ உணர்வு நீஉட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.
61
அண்டம்நீ அகண்டம்நீ ஆதிமூல மானநீ
கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்ட கோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே.
62
மையடர்ந்த கண்ணினார் மயங்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்உற் றிருப்பிர்காள்
மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்
உய்யடர்ந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்விரே.
63
கருவிருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்த சொன்னவார்த்தை குறித்து நோக்கவல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிலங்கு மேனியாகிச் சென்றுகூட லாகுமே.
64
தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாடல் எவ்விடந் தெளிந்த நீ ரியம்புவீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக வுள்ளதும் சிவாயவஞ் செழுத்துமே.
65
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே.
66



கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தராய்
அண்டமுத்தி ஆகிநின்ற வாதிமூலம் ஆவிரே.
67
ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவிர்காள்
கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லிரேல்
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.
68
உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும்வாச லைத்துறந்து உண்மைசேர எண்ணிலிர்
உழலும் வாச லைத்துறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.
69
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டராணை அம்மைஆணை உண்மையே.
70
இருக்கவேணும் என்றபோ திருக்கலாய் இருக்குமோ
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தென்ப பதங்கெடீர்.
71
அம்பத்தொன்றில் அக்கரம் அடங்கலோர் எழுத்துமோ
விண்பரந்த மந்திரம் வேதநான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.
72
சிவாயம் என்ற அக்ஷரஞ் சிவனிருக்கும் அக்ஷரம்
உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம்அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட் டழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே.
73
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானுமல்ல
உரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே.
74
ஆத்துமா வனாதியோ ஆத்துமா அனாதியோ
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ
தாக்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே.
75
அறிவிலே பிறந்திருந் தஆகமங்க ள்ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர்
உறியிலே தயிரிருக்க ஊர்புகுந்து வெண்ணைய் தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே.
76
இருவரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்
உருவரங்க மாகிநின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்தபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லிரே.
77
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினாற் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
78
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவரென்ன துன்னதென்னவும்
கண்ணிலே கண்மணிஇருக்கக் கண்மறைந்த வாறுபோல்
எண்ணில் கோடி தேவரும் இதின்கணால் விழிப்பதே.
79
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.
80
மிக்கசெல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள் பெண்டீர்சுற்ற மென்று மாயைகாணும் இவையெல்லாம்
மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ.
81