என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 10 மே, 2011

மாய்ந்து மாய்ந்து தும்மிக்கொண்டிருக்கும் மஞ்சுபஷினி என்கிற நளினி சம்பத்

நேற்றைய என் திரிக்கு பாவம் எதிர்பார்த்த அளவு ஈ-கரையிலிருந்து எந்த எதிர்ப்புகளும் வராததினால் கலை அவர்கள் கண்ணீர்விட்டு அனுதாபம் தேடிக்கொள்ள அதைக்கண்டு  மூக்கு சிந்தாத குறையாக மஞ்சுபாஷினி என்ற நளினி  சம்பத் அழுது அழுது எழுதிக்கொண்டிருக்கிறார். 

காலையில் சென்றுவிட்ட கலை மாலையில் திரும்பி வந்து பார்க்கிறார்... ஏகப்பட்ட ஆதரவு தனக்கும் எக்கச்சக்கமான எதிர்ப்பு லதாராணிக்கும் இருக்கப் போகிறதென்று  வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி... அங்கே நான் சொன்ன அந்த நாலுபேரைத் தவிர மற்றவர்கள்  "மூச்". அப்போதுதான் புரிகிறது கலை அவர்களுக்கு. ஆஹா...  நம்மை மற்றவர்களும் புறமொதுக்குகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு.... "யாருமே எனக்கு ஆதரவளிக்கவில்லையே இதனால் எனக்கு வருத்தமில்லை" என வருத்தப்பட்டு  கண்ணீர் வெள்ளம் பாய்ச்ச.... அந்த ஈரம் பட்ட ஜலதோஷத்தில் தான் மஞ்சு அங்கே இன்னமும் தும்மிக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஒரு அனுதாப அலை அங்கு ஏற்படுமென்று நானும் கனவிலும் நினைக்கவில்லை. அடேங்கப்பா   ... 1000  பேர்களுக்கு மேல் படித்துவிட்ட திரியில் வெறும் 4  பேர் மட்டுமே மாற்றி மாற்றி எனக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும்போது பாவம் அதை உணர்ந்த கலை கூட      கையெடுத்துக் கும்பிட்டுவிட்டார் இனி யாரும் எனக்கு ஆதரவாக அனுதாபப் படவேண்டாம் என்று. ஆனால் விடுவாரா மஞ்சு பாஷிணி..  காலையில் பதிவிட்ட திரிக்கு யாருமே   எதிர்ப்பு  தெரிவிக்க   வில்லையே 
எனப் புரிந்த பின்னர்  கண்ணீர் கொப்புளித்து கரைபுரண்டோட எனக்கு பதில் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு கலையை மறைமுகமாகத் தாக்கி  நான் எழுதியதை விட அதிகமாக அவரின் நிலையைக் குலையச்
செய்துகொண்டிருக்கிறார்.  எத்தனை  நாள்  ஆதங்கமோ  என்புண்ணியத்தில்
 தீர்த்துக்கொண்டிருக்கிறார்.   எத்தனை பேருக்குத்தான் புரியப்போகிறதோ இதுவும்?  இப்படியானது இன்றைய நிலை.

இப்படி மஞ்சுவின் அன்பான தும்மலில்  வெளியேறப்போகும் கிருமி இன்னும் எத்தனை நிர்வாகிகளை அங்கு தும்மச் செய்யப் போகிறதென்று நாளை பார்க்கிறேன். இபபோது நேரமாகிவிட்டது. இந்த நாடகத்தை
பார்த்துக்கொண்டிருந்தால் எனக்கு காலவிரயம் ஆகுமாதலால் .. அடுத்த எபிசொட் நாளைக்குப் பார்க்கிறேன். இப்போதைக்கு the  end .


(மறக்காம நாளைக்கு mask  போட்டுக்கிட்டு தான் அந்தப்பக்கம் போகணும் எனக்கு ஈரம் ஆகாதுப்பா .... தோஷம் தாங்கும். அதாங்க ஜல தோஷம்.... அவ்ளோ ஈரமாம் அங்க)


"இங்க  எனக்குப்  புரியாத  ஒரு  விஷயம்  என்னான்னா.... நான் கலைங்கற   அந்த அடாவடித்தன ஆளுக்கு எழுதின போஸ்டிங் க்கு நளினிக்கு  ஏன் இவ்ளோ கோவம் வருதுங்கரதுதான். பனைமரத்துக்கு தேள் கொட்டினா இங்கயேன் நெறிகட்டுதுங்கறது புரியாத புதிரா இருக்கு. அங்க எத்தனையோ உறுப்பினர்களும் நிர்வாகிகளும் படிச்சு அமைதியா இருக்கும்போது இந்தம்மா ஏன் இப்படி வார்த்தைக்கு வார்த்தை Red  Font  ல போட்டு    என்னை தாக்கறாங்களோ தெரியலியே... என்னை தாக்கவேண்டிய அவசியம் இவளுக்கு ஏன் வந்ததுன்னு இன்னும் என்மண்டையை  கிளறிகிட்டிருக்கேன். என்ன கண்றாவியோ..... யாமறியேன் பராபரமே! இதுக்காக   காலைல என் போன் நம்பர் வேறு ஒருத்தர்கிட்டே இருந்து வாங்கி கலைக்கு வக்காலத்து வாங்க என்கிட்டே பேசி இருக்காங்க.

ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நான் 2 ,3  ID ல வந்தது பெரிய குற்றம் போலவும் அதனால்  ஏதோ என்னோட பண்பாட்டுக்கு / தமிழர்
பண்பாட்டுக்கு இதனால்   இழுக்கு வந்துட்டதுபோலவும் ஆதிராவும், மஞ்சுபாஷினியும் மாத்தி மாத்தி பேசிகிட்டிருக்காங்க. 

லதாராணிங்கற ஒரிஜினல் பேரை மறைச்சு ஈ-கரைல உலாவந்தேனாம்.
கணினியில் 2003லிருந்து யாதுமானவள்ங்கற  பேர்ல  எழுதிகிட்டிருக்கேன். காலைல போன்ல பேசும்போதுகூட என் ப்ளாக் படிச்சுட்டு உங்க 
குழந்தைங்களப் பத்தி ரொம்ப நல்லா  எழுதி இருக்கீங்கன்னு பாராட்டி பேசறவங்க... என்னைப்பற்றி ன்னு என் ப்ளாக்ல யாதுமானவள் என்கிற  என்புனைப்பெயர் குறிப்பிட்டத
பாக்காமலா என் ப்ளொக்ஸ் படிச்சுகிட்டிருக்காங்க?
சரி அப்படியே வச்சுக்குவோம்.  . மஞ்சு பாஷிணி ங்கற பேரே ஒரு பொய்  பேர்தான். 

அந்தமாவோட உண்மையான பேர் நளினி. இந்தம்மா வேற பேர்ல வரும்போது தமிழர் பண்பாடு பவித்ரமா அப்படியே இருக்காமே  இது எப்படின்னுதான் எனக்கும் புரியலே.

ஒரு கருத்தை சொல்லனும்னு முடிவு பண்ணிட்டா  எவ்ளோ தடை வந்தாலும் நம்ம குறிக்கோளை விட்டுடக்கூடாதுன்னு அவங்களுக்குத் தெரியலே.

நம்ம நடிகை வேள்  MR ராதா இருந்தாரே அவர்  நம்மளை மாதிரிதான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்.  "கீமாயணம்னு" ஒரு நாடகம் போட்டார். அதை பார்த்துட்டு  ஆய்  ஊய் ன்னு அப்போ ஒரே கூப்பாடு போட்டுக்கிட்டு ஒரு கூட்டம் அலைய அந்த நாடகத்தை தடை செஞ்சுடுச்சி நம்ம கவர்மென்ட்.

விடுவாரா நம்ம ஆளு... அந்த பேர்லதானே போடக்கூடாதுன்னு உடனே "கீமாயணம்" ங்கற    பேரை "வரலாறு" ன்னு வச்சு அதே நாடகத்தை
அடுத்தநாள் போட்டாரு. கூட்டம் அலை மோதுது.

அதுக்கும் தடை... இந்த பேர் கொண்ட நாடகமும் தடை செய்யபபடுகிறதுன்னு கவர்மென்ட் தடை போடுது.  ஆனா  தடை போட போட  இவரும் தினம்  ஒருபேரா choose  பண்ணி  பேரை மட்டும்
மாத்திகிட்டு அதே நாடகத்தை 40  முறைக்கும் மேல ஒரே மாசம் போட்டிருக்கருன்னா பார்த்துக்கோங்க.

எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்கணும்னு ஒரு குறிக்கோள் கொண்டிருந்தாருன்னுதானே அர்த்தம்.

அப்படித்தான் லதாராணியும் கவிதாவாகி யாதுமானவளாகி கலையின் கொட்டத்தை அடக்க பல அவதாரங்கள் எடுக்க வேண்டியதாகிடுச்சி.

இவ்ளோ கஷ்டப்பட்ட எனக்கு சபாஷ் சொல்ல ஈ-கரையில இன்னைக்கு அமைதியா படிச்சுட்டு போன அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி. மௌனம் என்பது வேதம் னு சொல்வாங்க. இன்றைய ஈ-கரை உறுப்பினர்களின் மௌனம் அங்க எல்லோருக்கும் புரிஞ்சுபோக எல்லோரும் சொல்றாங்க இந்த "வேதம் புதிது" ன்னு. .

சரி இன்னைக்கு இவ்ளோதான்... மீதி நாளைக்கு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக