என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

உணரும் நேரமிது

பேய் பிடித்ததா?
நோய் பிடித்ததா?

வியாபார வளர்ச்சியா?
வெளிநாட்டில் வேலையா?

திருமணத்தடையா?
குழந்தை வரமா?

எல்லாவற்றிற்கும் தீர்விருந்தது
லோக ரட்சகனிடம்

 
காற்றிலிருந்து எடுத்த விபூதியிலும்
வாயிலிருந்து எடுத்த லிங்கத்திலும் 

 அந்த லோக ரட்சகன்
இன்று நோயின் பிடியில்

இவரை ரட்சிக்க
விபூதி யார் கொடுப்பது?

 அன்று
அவருக்கு செய்தனர் பூஜை
 இன்று -
அவருக்காகச் செய்கின்றனர் பூஜை

மரணப்படுக்கை மனிதனுக்கல்லவா?
ஆண்டவன் ஆத்துமா அவதிப்படுமா?

சாயி பாபா சாயும் நேரமாவது -
புரிந்துகொள்ளுஙள்

அவர் கடவுளல்ல -

நம்மைப்போல் -

மரணக்குழிக்குள் புதையப்போகும்
சாதாரண மனிதன் தான் என்று!

ஒரு வித்யாசம் -

ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்

இக் கலியுகத்திலும்-
காவியுடை தரித்து

கல்வியில் சிறந்தோரையும்
 கடவுள்நானெனச் சொல்லி

தன்வசப்படுத்திய-
ஓர் திறமைசாலி என்பதை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக