என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 14 மே, 2011

சூரியாஸ்தமனம் ...?

விரித்து வைத்த ஐந்து விரல்
உதய சூரியனாகத்தான் எனக்கு அறிமுகம் 

என் சிறுவயதில் - 
தேர்தல் நேரத்தில்
எங்கள் வீட்டுச் சுவர்களில்  கூட
சூரியன் உதித்ததைக் கண்டு
பெருமைப் பட்டிருக்கின்றேன்
அப்பா சொல்லச் சொல்ல -

கலைஞர்  கட்சிவளர்த்த விதம்கேட்டு
கண்ணை விரித்து   வியந்திருக்கிறேன்
தமிழைப் போற்றிய விதம்கேட்டு
காது இனிக்கக் மகிழ்ந்திருக்கிறேன்

ஐந்து முறை தமிழக முதல்வர்  
பதிமூன்று  முறை தொடர்ந்து
சட்டசபைத் தேர்தலில் வெற்றி
சாதாரண சாதனையா இது?

எத்தனை இக்கட்டுகளைச்  சந்தித்தவர் 
எத்தனை நன்மைகளைச் செய்தவர்
எப்படியெல்லாம் போற்றப்படவேண்டியவர்
ஒட்டுமொத்தத் தமிழனே வியக்கும் அறிவாளி

தவறு செய்துவிட்டாரே -

தமிழினத்தின் அழிவுக்கு
துணையாகிப் போய்விட்டதையும்
பொழுதுபோக்குக் கலையெல்லாம்
உழுதுபார்த்து விட்டதையும்

தொலைத் தொடர்பு ஊழலில் 
துணைவியாரை சேர்த்ததையும்
பெற்றது முதல் பேரன்வரை
அதிகாரம் கொள்வதையும்

கண்மூடித் தனமாக
ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்
மக்கள் இல்லை  என்பதை அறிந்திருந்தும் -

அறிவாலயத்தில் அமர
மூத்த  அறிஞர்கள் முதல்
முதிர்ந்த அனுபவசாலிகள் வரை
குறைவில்லாமல் குழுமியிருக்க
 
அனைவரையும் ஒதுக்கிவிட்டு
துணைவிவரை தொகுதிக்குள் விட்டதால்
இணையற்ற  கட்சியின்று
இருள் சூழ சுருண்டுவிட்டதே!

வெஞ்சூரியனை -
இலை மூடி மறைத்துவிட்டதே!
முரசு ஒன்று உரசிவிட்டதே!

தகுதியொன்றும்  இல்லாத தன்மகளை
தலைநகர்வரை அனுப்பிவைத்ததன் விளைவுதான்
தலையெழுத்தையே மாற்றிவிட்டது - கட்சியைத்
தலை முழுகவும் வைத்து விட்டது

மொத்தத்தில் -

பெற்ற மகள் தகப்பனுக்குக்
கொள்ளியாய் அமைந்து விட்டாள்!
"தமிழ்மொழி" வளர்த்த கட்சியைக்
"கனிமொழி" காவு வாங்கி விட்டாள்.

என் இதயமே கனக்கிறதே-
வயதான இதயம் தாங்குமா இதை?

உறங்கும் சூரியன் விடியலில் உதிக்குமோ?
அஸ்தமனம் ஆகிவிட்டதோ ஐந்துவிரல் ?

4 கருத்துகள்:

  1. அறிவாலயத்தில் அமர
    மூத்த அறிஞர்கள்
    முதிர்ந்த அனுபவசாலிகள்
    குறைவில்லாமல் குழுமியிருக்க

    அனைவரையும் ஒதுக்கிவிட்டு
    துணைவிவரை தொகுதிக்குள் விட்டதால்
    இணையில்லாத கட்சியின்று
    இருள் சூழ சுருண்டுவிட்டது

    பதிலளிநீக்கு
  2. anaiya pora vilakku prakaasamaa eriyum nu solluvaangale,, ipo thaan theriyuthu,, aathule pora thanni,, neeyum allikko naanum allikiren nu potti pottu alllunaanga,, panathai allunavangalukku makkaling manathai (vote) alla mudiyavillai paartheengalaa...........

    பதிலளிநீக்கு
  3. உண்மையை உணர்ந்து உதிர்த்துவிட்டீர்கள் அருமையான வரிகளில் தாங்கா மனதுக்கு இறைவன் சாந்தி கிடைக்கட்டும்

    பதிலளிநீக்கு
  4. பெற்ற மகள் தகப்பனுக்குக்
    கொள்ளியாய் அமைந்து விடடாள்

    தமிழ் மொழியால் வளர்த்த கட்சியைக்
    கனிமொழி காவு வாங்கி விட்டது.

    arumaiyaana varigal,, unmaiyaana varigal,,,,

    பதிலளிநீக்கு