என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 17 ஜூன், 2011

அவ்வையின் நூல்கள் - மூதுரை


நூல்கள் - மூதுரை


அவ்வையின் வாக்குண்டாம் (மூதுரை)
[
தமிழின் பொக்கிஷங்கள் எனப் போற்றப்படும் நூல்களில் முக்கியமான இடத்திலிருப்பது அவ்வை மூதாட்டியின் படைப்புக்களனைத்தும். இவர் படைப்புக்கள் அன்று முதல் இன்று வரை அழியாப் புகழ் பெற்று மணம் பரப்பக் காரணம், அதில் பொதிந்துள்ள அறநெறிக் கருத்துக்கள்தாம். 

அறிவுக்கு விருந்தாக இருக்கும் இந்நூல்களை சேனையில் பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் படித்து கரை கடந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திடுக!

காப்பு - வெண்பா 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதந் 
தப்பாமற் சார்வார் தமக்கு. 

பிரித்துப் படிக்க: 
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு. 
(துப்பு - சிவந்த பவழம் ; ஆர் - அழகு,; மாமலராள் - சரஸ்வதி ; நுடங்காது - நோய்பிடித்து சிதையாது)

பவழம் போல் சிவந்த திருமேனியையும் தும்பிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை நறுமணமிக்க பூக்களைக் கொண்டு பூஜை செய்வோருக்கு நல்ல வாக்கும் மனமும் செந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் அருளும் (அறிவும் ) கிடைக்கும் என்கிறார் அவ்வை பிராட்டி. 

மனிதப் பிறப்பில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் ; அந்த உதவி/உபகாரம் பற்றி அவ்வை கூறுகிறார்...

உதவி எப்படி செய்ய வேண்டும் என்பதை; 

நன்றி யொருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி 
என்று தருங்கோல் எனவேண்டா - நின்று 
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் 
தலையாலே றான்தரு தலால்.

(தெங்கு - தென்னை ; தாள் - அடி, (வேர்) 

நிலைபெற்று உறுதியாக நீண்டு வளரும் தென்னையானது தான் வேர் மூலம் குடித்ததை நீரை எப்படி thalai மீது கொண்டு மிக்க இனிமையும் நல்லதுமான இளநீரைத் தருகிறதோ அதே போல் ஒருவருக்கு ஒரு உபகாரம் செய்துவிட்டு அவன் அதை எப்போது நமக்குத் திருப்பிச் செய்வானோ என சந்தேகப்படவேண்டாம்... தக்க நேரத்தில் அதன் பலன் கிட்டும் என்பதாக அழகாகக் கூறுகிறார் அவ்வை.

அடுத்ததாக ... 
[/b][/u]எப்படிப்பட்டவர்க்கு உபகாரம் செய்யவெண்டும் என்றும் கூறுகிறார் [/b][/u]

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரங் 
கல்மேல் எழுத்துப் போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.

அதாவது, நற்குனங்களுடிய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அதே நேரம், அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் என்கிறார்.

அடுத்து .... தொடர்வோம்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக