என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 14 ஜூன், 2011

கடனும் கவிதையும் ---


எல்லாமும் எல்லோர்க்கும் 
பிடிக்காதென்பது இயற்கை விதி

பழத்தை பறிக்கிறோம்
மரத்திற்கு வலி

பசுவிடம் கறக்கிறோம்
கன்றுக்கு பசி

ஒருவரின் தேவை 
அடுத்தவற்கு  வேதனை

கவிதையும் அப்படியே -

எல்லோரும் ரசித்தது
ஒருவருக்கு வலித்தது

எல்லோர்க்கும் வலித்தது
ஒருவருக்கு  ரசித்தது

எங்கோ ஒருவர்
எப்படியோ பாதிக்கிறார்

பாதித்த கவிதையால்
பாதிக்கும் நட்பு

கடன்  அன்பை முறிக்கும்
பழைய மொழி

கவிதையும் அன்பை முறிக்கும்
புது மொழி