தேங்காயும் நாயும்
ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச் செப்பு.
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச் செப்பு.
(பிரித்துப் படிக்க :
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது - செடியே
தீங்கு ஆயது இல்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் இணைச் செப்பு )
விளக்கம்: தோழி! (சேடி- தோழி) , தீமை இல்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியிலே தேங்காயையும் நாயையும் ஒப்பாகக் கூறு... எப்படியெனில்..
தேங்காயிடம் [color=red]ஓடும் இருக்கும் [/color].(ஓடு ஒன்றை கொண்டதாய் இருக்கும்) அந்த ஓட்டின் உட்புறம் வெளுத்திருக்கும். வெண்மையான தேங்காய் அதன் உள்ளிருக்கும். அனைவரும் நாடும் (விரும் பும்) தேங்காயானது குலையாகத் தொங்குவதால் அது வளைவதில்லை(நாணாது). கோணுவதில்லை . காய்களைத் தாங்க முடியுமா என அஞ்சுவது இல்லை.
அதே போல்... நாய் ... சில நேரம் ஓடும். சில நேரம் ஒரே இடத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கும் ([color=red]ஓடும் இருக்கும்[/color])
அதன் உள்வாய் வெளுத்து இருக்கும். எப்போதும் குறைத்துக் கொண்டிருப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. புதியவர்கள் யாரும் வருவதை (நாடும்) உற்றுப் பார்க்கும் , பிறகு குலைக்கும் . குலைப்பதர்க்குச் சிறிதும் வெட்கப்படாது ...யாரைக் கண்டும் அஞ்சவும் அஞ்சாது.
அதன் உள்வாய் வெளுத்து இருக்கும். எப்போதும் குறைத்துக் கொண்டி
இப்படி நாயும் தேங்காயும் ஒன்று என்று கவி காளமேகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக