என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

உதவி செய்"

வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது

முரண்படுகிறேன் -

அடுத்தவருக்கு உதவுவது
அறிவிக்கப்பட வேண்டும்

தற்பெருமையிது என்று
தவறாக நினைப்பவர்கள்

தலையிலே குட்டிக் கொள்ளுங்கள்...

காரணம் இதுதான் -

உதவி தெரியப்படுத்தப்படும்போது
நாமும் இதுபோல் உதவ வேண்டும்ற
எண்ணத்தைத் தூண்டும்

உதவி மறைக்கப்படும்போது..

வாங்கிய கடனை திருப்பித்தராமல்
ஏமாற்றுவதற்கு வழி வகுக்கும்...

ஒருவன் உழைக்க
அடுத்தவன் தழைக்க
அமைத்த வழியாகிவிடும்



முட்டாள்களாகவே இருக்க வேண்டாம்


மாற்றுவோம்...பழைய மொழிகளை..

"உறவுகளுக்கு அறிவித்துவிட்டு உதவி செய்"... என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக