என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

மூவர் விடுதலை கோரிக்கை கருத்தரங்கு - குவைத்

நாள் : 8th Sep 2011   இடம்  : தந்தை பெரியார் நூலகம், குவைத்தில்  நான் பேசியது



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை அளித்தத்தின் நிமித்தம்  உலகெங்குமிருந்தும் தமிழர்கள் எழுப்பிய உச்ச குரலினால் உச்ச நீதிமன்றமே அதிர்ந்து அவர்களுக்கு எட்டு வார இடைக்காலத் தடை வழங்கியிருப்பதும், அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் இவர்களின் தூக்குதண்டனை இரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது குறித்தும் நாம் அனைவரும் அறிந்தோம்.

பிரச்சனை இதுவல்ல இப்போது... 
ராஜீவ் காந்தி கொலையின் பின்புலம் தெருவோர டீக்கடை பெஞ்சில் டீக்குடிக்கும் ஆசாமி முதல் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள் வரை தெளிவாக அறிந்ததுதான் . ஆனால் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் உள்ளவர்களுக்கு மட்டும் குழப்பம் இன்னும் தீரவில்லை என்பது தான் உண்மை.  யாருக்கு தண்டனை தரவேண்டும், யாரை விடுதலை செய்யவேண்டும் என்பதே தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்கள். 

எந்த வழக்கிலும் கொலைகாரர்களுக்கு மரணதண்டனை விதிப்பதும், அந்த குற்றத்தை செய்வதற்குத் துணையாக இருந்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்குவது மரபு. இது பண்டைய காலந்தொட்டு நிகழ்ந்து வருவது. ஆனால் இந்த குற்றத்தில் மட்டும் விசித்திரமான முடிவுகள்...

சுபா, சிவராசன், தணு என்ற மூன்று கொலையாளிகள் ஏற்கனவே இறந்துவிட்டார்கள்.... வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை... ஆனால் அக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட மூவருக்கு குற்றவாளிகள் என்ற பட்டம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கிறார்கள்..இம்மூவரையும் விடுதலை செய்யவேண்டுமென்று குரல் வருகிறதே ஒழிய ... மறுவிசாரணை செய்யப்படவேண்டுமென்று குரல் கொடுப்பதற்கு யாரையும் காணோம், 

இக்கொலைக் குற்றத்தில் மூன்றுவிதமான குற்றவாளிகள் உள்ளனர்...

கொலையாளிகள் - இறந்துவிட்டார்கள் 
கொலை செய்யத் தூண்டியவர்கள் - விசாரிக்கப்படவே இல்லை 
கொலை சியா துணையாய் இருந்தவர்கள் - தூக்கு தண்டனை விடிக்கப்படுகிரார்கள் .

என்னைப்பொறுத்தவரை இந்திய அரசு ஒரு தேச துரோகம் செய்துகொண்டிருக்கிறது. ஒரு பாரதப் பிரதமரை கொலை செய்ய தூண்டிவிட்டவர்களுக்கு  அடைக்கலம் கொடுத்து துனையாயிருந்தவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்தால்..  இது துரோகச் செயலன்றி வேறென்ன?

உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாப்பதன் மூலம் தாய் நாட்டிற்கு துரோகம் செய்ததாகிவிடும்.

இங்கு கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு எப்போது இருக்கப்படுமேன்று ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியுடன் இருப்பது மூன்று தமிழர்கள்.  இந்த மூன்று தமிழர்களின் உயிர்களைக் காக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருப்பவர்கள் வேற்றுமொழி பேசிக்கொண்டிருப்பவர்கள்தான். தமிழர்கள் அல்ல. 



எப்போதுமே வந்தோரை வாழவைப்பது தமிழர்கள் தான் என பெருமையாகச் சொல்லிக்கொள்வோம். ஆனால் வந்தவன் தமிழர்களுக்கு ஒரு குரலாவது கொடுப்பான என்றால் இல்லை. அமிதாப்பச்சன் தனது வலைத்தளத்தில் எழுதுகிறார்... ரஜினியின் கையசைவில் தமிழ் நாடே இயங்கும் என்று.  எங்கே அசைக்கிறார்... அவருக்கு உடல்நிலை சரியில்லைஎன்று மண்சோறு உண்ட தமிழர்களை கண்டு கையசைத்தார், மொட்டையடித்து அழகு குத்தி காவடி எடுத்த தமிழர்களைக் கண்டு கையசைத்தார். ஆனால் தூக்குக் கயிற்றை கண்ணெதிரே கொண்டு ஒவ்வொரு நிமிடமும் நிம்மதியின்றி துடிக்கும் தமிழர்கள் விடுதலைபெற வே ண்டுமேன்று எண்ணினாரா?  இங்க்ஹு, இந்தக் குவைத்தில் இந்த மூன்று தமிழர்கள் உயிர் காக்க நாம்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். குவைத்தில் உள்ள அத்தனை சங்கங்களுமா சேர்ந்துள்ளது இங்கு? இல்லையே. குவைத் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற சில தமிழ்ச் சங்கங்கள் இவ்விடயத்தைப் பற்றி கவலை கொண்டதாகவே தெரியவில்லையே? 


அதேபோல் இங்கு மூவர் விடுதலைக்காக தீக்குளித்து உயிர் மாய்த்துக்கொண்ட செங்கொடியை தமிழர்களின் தாயானாள், தியாகி என்றெல்லாம் கூறுவதில் எனக்கு உடன் பாடில்லை. உயிரை மாய்த்துக்கொள்வது மிகப்பெரிய முட்டாள் தனம். நான்குபேர் சேர்ந்து குரல் கொடுத்துத்தான் நீதி பெற போராட வேண்டுமே தவிர நான்கு பேர் நம்மைத் தூக்கிக் கொண்டுபோய் ஒப்பாரிவைக்க உயிர் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவள் உயிரோடு இருந்து குரல் கொடுத்து நான்கு நாநூறாகி, நானூறு நாலாயிரமாகி, நாலாயிரம் நாற்பதாயிரமாகக் குரல் எழுப்பி நீதி கேட்டிருந்தால் நானும் கர்வப்பட்டிருப்பேன். அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் இது போன்ற காரியங்களை இனியும் நாம் ஆதரிக்கக் கூடாது. 

முடிவாக, தமிழன் என்று ஆட்சிப் பீடத்தில் அமர்கிறானோ அதுவரையில்தமிழர்களின் கழுத்துக்களை கயிறுகள் இருக்கிக்கொண்டுதான் இருக்கும்.  இவர்களைத் தூக்கிலிடுவதால் இந்த வழக்கு முடிந்துவிடுமென்று நினைத்து கொக்கரித்துக்கொண்டிருக்கும் ஒருசாராருக்கு... ஒன்று சொல்கிறேன். தமிழன் கிள்ளுக்கீரையல்ல. மீண்டும் தமிழாய்ந்த தமிழ் மகன் ஆட்சிப் பீடத்தில் வருவான் அப்போது இந்தக் கொலைவழக்கு மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகளை தூக்கிலிடப்படுவார். .....அதற்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல்... இந்தியாவின் பிரதமரைக் கொன்ற / கொல்லத் தூண்டிய உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கவேண்டும். அதற்கு, இம்மூவரை விடுதலை செய்து .. இவர்களின் ஒத்துழைப்புடன்,இவர்களையே  சாட்சியாக வைத்து மறுவிசாரணைக்கு உட்படுத்தி அவ்வழக்கில் நீதி பிறழாமல் நடத்த வேண்டுமென்ற என் கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்து  விடை பெறுகிறேன் வாய்ப்பிற்கு நன்றி.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக