ஊனமான உடல்களோடும்
நோய்தாக்கிய விகாரத்தோடும்...
கையேந்திய நிலையில்..
கோவில் வாசலில் பிச்சைக் காரர்கள்...
இருந்தாலும் மூடர்களுக்குப் புரிவதே இல்லை
இவர்களைத்தாண்டி உள்ளே சென்று
கடவுளிடம் பிச்சைகேட்கிறோமே...
இத்தனை பிச்சைக்காரர்களை
வீட்டு வாசலிலேயே வைத்திருப்பவன்
நமக்கு என்ன கொடுத்துவிடபபோகிறானென்று ..?
உடனே சொல்ல வேண்டாம்...
அவர்களுக்கு பக்தி இல்லையென்று...
பக்தி இல்லை .. ஏனென்றால்
கடவுளே இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது...
இல்லையென்றால்...
அவனும் பக்தியோடு -
உள்ளே சென்று கையேந்தி இருப்பானே!
அவனும் பக்தியோடு -
உள்ளே சென்று கையேந்தி இருப்பானே!
--- லதாராணி பூங்காவனம்
ம்ம்ம் ....
பதிலளிநீக்கு