என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 30 ஜூலை, 2018

வாழ்வார் கலைஞர்…. இவர் வாழும் கலைஞர்!

                                                                               

மனிதப்  போர்வையில் உலவிக்கொண்டிருக்கும்
மதம் பிடித்த மிருகங்களே…

பித்தேறிய நிலையில் பேயாட்டம் ஆடிக்கொண்டு
பிணந்தின்னிக் கழுகுகளாய் காத்திருக்கும் கயவர்களே…

வானமளந்த கலைஞரை வாய்க்கு வந்தபடி
வசைபாடும் உங்களை மன்னிக்கவே முடியாது …

அழுகிய பிணத்தைவிட அசிங்கமாகத்தான் இருக்கிறது…
காவி பூசிய உங்கள் ஒவ்வொருவரின் முகமும்.…

குரூரத்தைக் கொட்டும் கொடுஞ் சொற்களோடு
கூடிக்களிக்கும் குப்பைத் தொட்டிகளே….

கலைஞர் என்பவர் காலம் செதுக்கிய சிற்பம் …

உங்கள் ஏச்சுக்களாலும் பேச்சுக்களாலும்
இந்தச் சிற்பத்தைச் சிதைத்துவிட முடியாது…

கலைஞரை நோக்கி நீட்டிய கைகளெல்லாம்
முடமாகிப் போனததுதான் வரலாறு.

உடல்நிலை குறைந்த ஒப்பற்ற தலைவனின்
உயிர்பிரிய வேண்டுமென்று எக்காளமிடுகிறீர்களே ..

இயற்கையின் இயல்பு என்பதைக்கூட அறியாத மூடர்களே
உங்கள் இயக்கங்கள் அழிந்து போகட்டும்
உங்கள் எண்ணங்கள் சிதைந்து போகட்டும் …
உங்கள் இதயங்கள் வெடித்துச் சிதறட்டும் …

எங்கள் கலைஞர் வாழ்வார்…
வாழ்ந்துகொண்டே இருப்பார்….
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்…

ஆம் .. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்…
வாழ்வார் கலைஞர்…. இவர் வாழும் கலைஞர்!

- லதாராணி பூங்காவனம்.




2 கருத்துகள்: